districts

img

திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரியில் நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு

நாகப்பட்டினம், ஜூலை 14-

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சியில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஆய்வு செய்தார்.

   கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருக்குவளை ஊராட்சியில் அண்ணா பொறி யியல் கல்லூரியின் உறுப்புக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 414 மாண வர்கள் படித்து வருகிறார்கள். கல்லூரியை வியாழனன்று கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பார்வையிட்டார்.  

    அப்போது கல்லூரி முதல்வரை சந்தித்து, உள்கட்டமைப்பு, வளாகத்தில் உள்ள  மாணவியர்கள் தங்கும் விடுதியில் அவர்களின் வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மாணவிகள் சட்டமன்ற உறுப்பினரிடம், தினசரி செய்தித்தாள்கள், வளாகத் தூய்மை உள்ளிட்ட சில குறைபாடுகளை கூறினர். கல்லூரி முதல்வர்  மற்றும் விடுதிக் காப்பாளரிடம் இது தொடர் பாக பேசி உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி தெரிவித்தார்.  

   கல்லூரி வளாகத்திற்குள் சாலை, வாகன  காப்பகம், வளாகத்தைச் சுற்றி பூந்தோட்டம்  உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பொதுப்பணித் துறை மூலம் விரைவில் நிறைவேற்றி தருவ தாக கல்லூரி முதல்வர் உறுதி அளித்தார்.