கலைத் திருவிழா போட்டி திருக்களம்பூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
பொன்னமராவதி, நவ.26 - கலைத் திருவிழா போட்டியில் மாநில அளவில் 2 ஆவது இடம்பிடித்து திருக்களம்பூர் அரசு பள்ளி மாண வர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட கலை திருவிழா போட்டிகளில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் வீதி நாடகம் என்ற பிரிவில் மாநில அளவில் 2 ஆம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள கிராமத்தின் பெயரை மாநில அளவில் கொண்டு சேர்த்து பெருமை சேர்த்துள்ள மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த நந்தினி, தலைமை ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் சிவகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், ஊக்கமும் உற்சாகம் கொடுத்த பள்ளி மேலாண்மை குழு தலைவி நந்தினி பாரி மற்றும் உறுப்பினர்கள், ஒத்துழைப்பு அளித்த பெற்றோர்கள் மற்றும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
பாபநாசம், நவ.26 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: பாபநாசம் வட்டாரத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நடவு செய்யப்பட்டு பயிர்கள் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளன. தற்போது பருவமழை தொடர்ச்சியாக இல்லாமல் அவ்வப்போது பெய்து வருவ தால், நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் அதிகள வில் தென்படுகிறது. இலைச் சுருட்டுப் புழுக்கள் இலையை சுருட்டி அடிப்பகுதியில் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகள் வெள்ளை நிறத்தில் தென்படும். மேலும் இலைகள் நீளவாக்கில் மடிந்தும், இலைச் சுருட்டுப் புழு தீவிரமாகத் தாக்கிய நெல் வயல்கள் வெள்ளை நிறத்தில் காய்ந்துப் போயும் காணப்படும். இலைச் சுருட்டுப் புழுவினை கட்டுப்படுத்த விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு 2 அளவில் வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பறவை இருக்கைகள் ஒரு ஹெக்டேருக்கு 40 - 50 வரை அமைத்து, புழு பெருக்கத் தினை கட்டுப்படுத்தலாம். தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசலை நடவு செய்த 45 ஆம் நாளில் தெளிக்கலாம். இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு அதிகமாக, அதாவது தூர் கட்டும் பருவத்தில் 10 சதவீத தாக்குதல் அல்லது பூக்கும் பருவத்தில் 5 சத வீத தாக்குதல் காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 400 மிலி அசார் டிராக்டின் அல்லது 60 மிலி குளோரன்ட்ரனி லிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்ஸி அல்லது 400 கிராம் கார்ட்ராப் ஹைட்ரோகுளோரைடு, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை களை கடைபிடித்து இலைச் சுருட்டுப் புழு தாக்குத லைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மருத்துவத் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
கரூர், நவ.26 - அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கரூர் மாவட்ட மாநாடு கரூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பி.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.நடராஜா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் டி.மனோகரன் வேலையறிக்கையை முன்வைத்தார். மாவட்ட பொரு ளாளர் நாகராஜன் வரவு-செலவு அறிக்கையை முன்வைத் தார். திருச்சி மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாட்ஷா சிறப்பு ரையாற்றினார். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். தனியார் நிறுவனங்கள் போல பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் 5ஜி சேவையை வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கையை உடனே தொடங்க வேண்டும். மருத்துவத் திற்கான தொகையை ரூ.1000-லிருந்து 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
‘காபி வித் கான்ஸ்டபிள்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி
பெரம்பலூர், நவ.26 - பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளரால் உருவாக்கப்பட்ட திட்டமான ‘காபி வித் கான்ஸ்டபிள்’ கலந்துரையாடும் என்ற நிகழ்ச்சி வாரந்தோ றும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், காவலர்களின் நலன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தி சிறப்பான முறையில் பணியாற்ற வழிசெய்வ தாகும். நவ.25 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு, சிறப்பு பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் காவலர்கள், முதல் தலைமைக் காவலர்கள் 13 பேரை தேர்ந்தெடுத்து மாவட்ட காவல்துறையை மேம்படுத்தும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடினார்.
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
திருச்சிராப்பள்ளி, நவ.26 - திருச்சி கோப்பு மேலதெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகன் மகிழ்மித்திரன் (3) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதி யில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மகிழ்மித்திரன் வீட்டில் விளையாடு கொண்டிருந்த போது, வீட்டிற்கு வெளியே எர்த் வயரை தெரியாமல் தொட்டுவிட்டார். இத னால் மின்சாரம் பாய்ந்து மகிழ் மித்திரன் மயங்கி விழுந்தார். உடனே சிறுவனை திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறு வனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்ட தாக கூறினார். இச்சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லணைக் கால்வாய் ஆற்றில் குதித்து தாய்-மகள் தற்கொலை
தஞ்சாவூர், நவ.26 - கல்லணைக் கால்வாய் ஆற்றில், தாயும் மகளும் இடுப்பில் சுடிதார் துப்பட்டாவை கட்டிக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்போது கல்லணைக் கால்வாய் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தஞ்சா வூர் அருகே காசவளநாடு தெக்கூர் பகுதியில், கல்லணைக் கால்வாய் ஆற்றில் ஞாயிறன்று இரண்டு பெண் சடலங்கள் ஒன்றாக மிதந்து வருவதை பார்த்த பொதுமக்கள், அந்த சட லங்களை மீட்டு கரையில் சேர்த்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர் இரண்டு சடலங்களையும் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் நடத்திய விசாரணையில், உயிரி ழந்த பெண்கள் தஞ்சாவூர் விளார் சாலை, தில்லைநகர் லெனின் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி பத்மஜோதி (38) என்ப தும், அவரது இளைய மகள் தீபிகா (15) என்பதும் தெரியவந்தது. குடும்பப் பிரச்சனை காரணமாக செந்தில் குமாரை விட்டு பிரிந்து பத்மஜோதி இளைய மகளுடன் தஞ்சாவூரிலும், செந்தில்குமாரும் அவரது மூத்த மகள் பூர்விகாவும் (17) திருவாரூ ரில் வசிக்கின்றனர். வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால், தாயும் மகளும் சுடிதார் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக, தஞ்சாவூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.
காயமடைந்த குதிரைக்கு சிகிச்சை
வேதாரண்யம், நவ.26 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டாயி ரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான், வெள்ளிமான்கள், ஆயிரத் திற்கும் மேற்பட்ட குரங்குகள், 175 மட்ட குதிரைகள், காட்டுப் பன்றி, முயல், நரி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் சாலையோரமாக கால் முறிந்த நிலையில் கடந்த நவ.17 அன்று ஆண் மட்டகுதிரை ஒன்று கிடப்பதாக வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குதிரை பிடி ஆட்களை கொண்டு, குதிரையை பிடித்தனர். பின்பு, வனத்துறையினர் கால்நடை மருத்துவர் சிவசூரியன் மற்றும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மணல் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
புதுக்கோட்டை, நவ.26 - முத்துப்பட்டிணம், குளந்திரான்பட்டு ஆகிய இடங்க ளில் உள்ள மணல் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்தம் மூலம் ஆற்று மணல் விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் மணல் ஒப்பந்ததார்களான புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன், குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன், அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள் என 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத் துறையினர் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு ஆவ ணங்களையும் கைப்பற்றி சென்றதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து, மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்ட தோடு அங்கிருந்த பெரும்பாலான வாகனங்கள், பணியா ளர்களும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், ஒவ்வொரு குவாரி களிலும் எந்தெந்த அளவுகளில் மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், முத்துப்பட்டிணத்தில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரனின் வீட்டுக்கு சனிக்கிழமை காலை ஒரு காரில் சென்ற மத்திய அமலாக்கத் துறை அதி காரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல, கறம்பக் குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டியில் மணல் ஒப்பந்த தாரர் கரிகாலனின் வீட்டிலும் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இரு இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். இரு வீடுகளிலும் மாலை வரை அமலாக்கத்துறை அதி காரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு
தஞ்சாவூர், நவ.26 - ஆயுள் காப்பீட்டுக் கழக மத்திய அலுவல கத்தின் அறிவுறுத்தலின் படி, ஆயுள் காப்பீட்டு கழகத் தலைவர் சித்தார்த்த மொகந்தி காணொலி மூலம், இந்திய அரசியல் சாசன தின உறுதிமொழி வாசிக்க, அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றனர். தஞ்சைக் கோட்ட அலுவ லகத்தில், அதன் முது நிலை கோட்ட மேலா ளர் கே.கே.சுஜித் முன்னி லையில், வணிக மேலா ளர் ஆர்.சூரஜ்குமார், விற்பனை மேலாளர் கே. குமரன் மற்றும் அனைத்து உயர் அதிகா ரிகள், அலுவலர்கள் இந்திய அரசியல் சாசன தின உறுதிமொழியை ஏற்றனர்.
நடந்து சென்றவர் விபத்தில் பலி
அரியலூர், நவ.26- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பட நிலை ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆறுமுகம் (62). இவர் கடந்த நவ.24 அன்று காலை உத்திர குடி கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று, மீண்டும் தனது ஊருக்கு செல்ல மீன் சுருட்டி வந்துள்ளார். மீன்சுருட்டி ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு நடந்து செல்லும் போது, அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாக னம் மோதியதில் ஆறு முகம் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆறு முகம் மகன் சக்திவேல் (41) கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீ சார் விபத்தை ஏற்படுத் திய ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழகுடி யிருப்பு, ஒத்த தெருவை சேர்ந்த பாரதி (35) என்ப வர் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்ற னர்.
ரேசன் கடை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
திருச்சிராப்பள்ளி, நவ.26 - தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணி யாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அள விலான தொழிற்சங்க பயிற்சி முகாம் ஞாயி றன்று திருச்சியில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலா ளர் தினேஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகி சங்கர் வரவேற் றார். சிறப்பு விருந்தின ராக ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் செல்வராஜ் கலந்து கொண் டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான ரேசன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் ரேசன் கடை ஊழியர்கள் தங்களது நிறை, குறைகளை கூறி னர். மேலும் ரேசன் கடை யில் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்று வது குறித்து சங்க நிர் வாகிகள் ஆலோசனை வழங்கினர். திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர். மாநில துணைத் தலைவர் என்.டி.ராம சாமி நன்றி கூறினார்.
நவ.28, 29 மயிலாடுதுறையில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
மயிலாடுதுறை, நவ.26 - மயிலாடுதுறை மாவட்டத் தில் முத்தமிழறிஞர் கலை ஞர் மு.கருணாநிதி நூற் றாண்டு விழாவை முன் னிட்டு “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத் தின் மூலம் சமூக முன்னேற் றத்திற்கு ஆற்றிய சாதனை களில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின் கீழ் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (நவ.28) அன்று காலை 10 மணிக்கு ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் (பூம்புகார்), பகல் 12 மணிக்கு பொறையார், டி.பி.எம்.எல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பிற்பகல் 3 மணிக்கு மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறி வியல் கல்லூரியிலும், புதன் கிழமை (நவம்பர் 29) அன்று காலை 10 மணிக்கு செம்ப னார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பகல் 12 மணிக்கு மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல் நிலைப் பள்ளியிலும், பிற்பகல் 3 மணிக்கு சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், அரசு தலைமை கொறடா, மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள், உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தெரிவித்துள்ளார்.
மரக்கன்று நடல்
பாபநாசம், நவ.26 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி சார்பில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் செங்குட்டுவன், அரசு பெண்கள் பள்ளி பெற் றோர் ஆசிரியர் கழகத் தலை வர் செல்வராஜன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலு ஆகியோர் பள்ளி வளாகத் தில் மரக் கன்றை நட்டனர். இதில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமார், மாணவர்கள் பங்கேற்றனர். என்.சி.சி அலுவலர் சர வணன் நன்றி கூறினார்.
அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் டிச.19 இல் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர், நவ.26 - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம், ஒன்றியத் தலைவர் எம்.தங்கப்பன் தலை மையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோ வன், ஒன்றியப் பொருளாளர் எஸ்.வி.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்தி ருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இது வரை நிவாரணம் வழங்கவில்லை. ஒரத்த நாடு வட்ட அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் உள்ள பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்கின்றனர். ஒரத்தநாடு வட்ட அலுவலக வளாகத்தில் அமர்ந்து கொண்டு, மனு எழுதித் தருவதாக கூறி சிலர் மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பறிக்கின்றனர். இதுகுறித்து வட்டாட்சியரி டம் பலமுறை எடுத்துக் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே இப்போக்கை கண்டித்து டிசம்பர் 19 அன்று ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்ன முடிவு செய்யப்பட்டது.