குடவாசல், டிச. 3 - கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சி கிராமம் பாம்பாக்கை பகுதியில் உள்ள இளைஞர்கள், பல்வேறு அமைப்பில் இருந்து விலகி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட னர். நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.எஸ்.ஜெய்கிஷ் முன்னிலை வகித்தார். சுரேஷ் தலைமையில் இணைந்த 15 இளைஞர்களை வரவேற்று, புதிய கிளை அமைக்கப்பட்டது. முன்னதாக புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் சங்கத்தின் வெண்கொடியை வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு ஏற்றி வைத்து உரையாற்றினார். மாவட்டத் தலை வர் எஸ்.எம்.சலாவுதின் அனைவருக்கும் உறுப்பினர் கார்டு வழங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், கொரடாச்சேரி ஒன்றிய செய லாளர் டி.ஜெயபால் ஆகியோர் சங்கத்தில் இணைந்த இளைஞர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, வாலிபர் சங்க துணைத் தலை வர் பி.ஆர்.எஸ்.சுந்தரய்யா, துணை செயலா ளர்கள் வி.தீனதயாளன், பி.விஜய் மற்றும் வாலிபர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நடைபெற்ற கூட்டத்தின் வாயி லாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாம்பாக்கை கிளைத் தலைவராக எஸ்.சுரேஷ், செயலாளராக கே.ரஞ்சித், பொருளா ளராக ஆர்.வினோத் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.