மயிலாடுதுறை, ஜூன் 17- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அருகேயுள்ள உக்கடை கிராமத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிலிருந்து விலகிய 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா அருள்செல்வம் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. ஏ.காமராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஸ்டாலின் வரவேற்று பேசினார். கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த் மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். எஸ்.எம்.மதுசூதனன் நன்றி கூறினார்.