கரூர், நவ.24 - தமிழ்நாட்டில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கான மருந்து மாத்திரை களுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் 15 ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங்கள் வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் செல் லாண்டிபாளையத்தில் பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங் களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மழைக்காலத்தில் டெங்கு, இன்பு ளூயன்சா, மலேரியா காய்ச்சல்கள் வரும். இந்த ஆண்டு அக்.29 வரை 4 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை 8500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளோம். நவ.25 அன்று தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்த உள்ளோம். டிசம்பர் 1 முதல் 30 வரை 5 சனிக்கிழ மைகளில் முகாம் நடத்த உள்ளோம். இதுவரை நடத்தப்பட்ட 4 முகாம்களி லும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். மேலும் 6 முகாம் களை நடத்த உள்ளோம். இதுவரை இந்திய மருத்துவத் துறை வரலாற்றில் 10 வாரங்கள் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதே இல்லை. அரசு மருத்து வமனைகளில் இன்புளூயன்சா காய்ச்ச லுக்கு மருந்து-மாத்திரை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு கூறினால், அவரை நேரிலே அழைத்து வாருங்கள். எந்த மருத்துவமனையில் மருந்து இல்லை என அவர் நிரூபிக் கட்டும். நானும் அந்த மருத்துவ மனைக்கு வரத் தயார். அதிமுக ஆட்சி இருக்கும் வரை ஆரம்ப மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையங்களில் பாம்புக் கடிக்கோ, நாய் கடிக்கோ மருந்து இருந்ததே இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆட்சியில் பாம்புக் கடிக்கு ஏஎஸ்வி மருந்தும், நாய் கடிக்கான ஏஆர்வி மருந்தும் உள்ளது. ‘இதயம் காப்போம்’ திட்டத்தை கோவை மதுக்கரை மலுமிச்சம்பட்டி யில் துவக்கி வைத்தோம். சென்னை ராயபுரம் தொகுதியில் ஒரு நாய் 27 பேரை கடித்துள்ளது.
மாநகராட்சிக்கு மக்கள் சொல்லாததால் அந்த சம்பவம் நடந்துள்ளது. வெறிபிடித்த நாய்கள் கடிக்கும்போது உடனே மாநகராட்சி நிர்வாகத்திற்கோ, உள்ளாட்சி அமைப் புகளுக்கோ தகவல் தெரிவித்தால் நட வடிக்கை எடுப்பார்கள். நிலவேம்பு கசா யம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் தயார் நிலை யில் வைத்திருக்கிறார்கள். இல்லை என புகார் கூறினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். விற்க கூடாத மருந்துகளை விற்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் போலி மருத்துவர்கள் பெருகிவிட்ட னர். அவர்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 போலி மருத்துவ மனைகளை மூடியுள்ளோம். 2 மருத்து வர்கள் மீது என்எம்சியில் புகார் அளித் துள்ளோம். மருந்து விற்பனை கூடங்க ளையும் கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடை உள்ளது. ஆனால் கர்நாட காவில் அனுமதி இருப்பதால், அங்கி ருந்து காய்கறி வண்டிகளில், காவல் துறையினரின் பாதுகாப்பையும் மீறி ஒரு சிலர் கொண்டு வந்துவிடுகிறார் கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல், எம்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.