districts

img

மாப்படுகை சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லை சிபிஎம், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை, டிச.13 - அடிப்படை வசதிகள் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவ சாயிகள், பொதுமக்கள் சாலை மறி யல் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை நகராட்சி மாப்  படுகை 1 ஆவது வார்டு, சிவன்கோவில் தெரு, வடக்குத்தெரு, நாராயணபுரம், அவையம்மாள்புரம், பிள்ளைத்தெரு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் படுத்தி வரும் சுடுகாடு - இடுகாட்டிற்கு இதுவரை பாதை வசதி, எரியூட்டும் கொட்  டகை, கருமாதி மண்டபம் இல்லை.  இதனால் இப்பகுதி மக்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இறப்பு ஏற்பட்டால், 10 ஆயிரம் ரூபாய்க்கு  மேல் செலவு செய்து கொட்டகை அமைத்து எரியூட்டும் அவல நிலை  நீடித்து வருகிறது. மேலும் சுடுகாட்டிற்கு செல்ல பாதையில்லை. கரடு முரடான  வரப்பு வழியாகவும், அருகிலேயே ஓடும்  சாக்கடையில் இறங்கி, சடலத்தை தூக்கி செல்லும் நிலை நீடிப்பதாக அப்  பகுதி மக்கள் கூறுகின்றனர். அருகிலுள்ள 11 ஆவது வார்டுக்கு  உட்பட்ட கிட்டப்பா காவேரி பாலம் அரு கில், நகராட்சி மற்றும் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்படுவதால், அத னைச் சுற்றியுள்ள பகுதிகளில் (3 கி.மீ  வரை) கடுமையான துர்நாற்றமும், பெரும்  சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இதை எதிர்த்து பலமுறை போராட்டங்  கள் நடத்தியும், மயிலாடுதுறை நக ராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்துவ தாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாப்படுகை ரயில்வே கேட் அருகே  செவ்வாயன்று நடைபெற்ற போராட்டத்  திற்கு கட்சியின் ஒன்றியச் செயலா ளர் டி.ஜி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.சீனி வாசன், நகர பொறுப்பு செயலாளர் ஏ.ஆர்.விஜய், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கணேசன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சி. மேகநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் எம். மணி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், விவசாயிகள் சங்கத்தினர் கண்  டன உரையாற்றினர்.  போராட்டக் களத்திற்கு வந்த நக ராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனால் 5 மணி நேரத்திற்கும்  மேலாக போராட்டம் நடைபெற்ற நிலை யில், போராட்டக்காரர்கள் சாலையில் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து, 10 நாட்களுக் குள் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உட னடியாக கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக அதிகாரிகள் உறுதிய ளித்தனர். பின்னர் போராட்டம் கைவிடப்  பட்டது.  இதில், அப்பகுதியை சேர்ந்த விவ சாயிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.