வேதாரண்யம், பிப்.27 - தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண் டித்து மாபெரும் காத்தி ருப்பு போராட்டம் நடை பெற்றது. நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நிலவும் மருத்துவர், செவிலியர், ஊழியர்கள் பற் றாக்குறையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டுமென கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தலைஞா யிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் தங்கதுரை தலைமையிலும், ஒன்றியத் தலைவர் கண்ணன், ரமேஷ் குமார் ஆகியோர் முன்னி லையிலும் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் நன்மாறன், மாவட்டச் செய லாளர் அருள்தாஸ், மாவட்டப் பொருளாளர் பாலு, வி.தொ.ச. ஒன்றியச் செயலா ளர் அலெக்ஸாண்டர் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் (பொ) சுந்தர ராஜன் போராட்டக்காரர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னார்.