districts

திருச்சி முக்கிய செய்திகள்

நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம் 

தஞ்சாவூர், ஜன.23-  தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பட்டுக்கோட்டை ஒன்றி யம்,  நடுவிக்கோட்டை ஊராட்சியில், தேவர் குடி யிருப்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பய ணியர் நிழற்குடை அமைக்கும் பணியை செவ்வாயன்று பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் துவக்கி வைத் தார். பட்டுக்கோட்டை ஒன்றியப் பெருந்தலை வர் பழனிவேல், மாவட்ட  ஊராட்சி குழு உறுப்பி னர் அலிவலம் அ.மூர்த்தி,  பொதுக்குழு உறுப்பினர்  அ.அப்துல் மஜீது, ஊராட் சித் தலைவி அன்பு ரோஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் ராசாத்தி முத்தமிழ் செல்வன், பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், உதவி பொறியாளர் ஆர்.லதா, நடுவிக்கோட்டை கரு ணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எழுது பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி, ஜன.23 - புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி ஒன்றி யத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருட்கள் வழங் கும் நிகழ்ச்சி மண மேல்குடி வட்டார கல்வி  அலுவலர் செழியன் தலை மையில் நடைபெற்றது. மணமேல்குடி வட்டா ரக் கல்வி அலுவலர் இந்தி ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மணமேல்குடி ஒன்றியத்தில் 30 புதிய  பாரத திட்ட மையங் களுக்கு எழுது பொருட் கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்  முத்துராமன் அங்கையற்கண்ணி, இயன்முறை மருத்துவர் செல்வக்குமார், கணக்கா ளர் கலைச்செல்வன் மற்றும் 30 தன்னார்வலர் கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.23- காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவ ரான ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு பாரதிய ஜனதா கட்சி யினர் இடையூறு ஏற்படுத் துவதாக கூறி, அத னைக் கண்டித்து தஞ்சா வூர் மாவட்டம், பேராவூ ரணி, அண்ணா சிலை  அருகில் காங்கிரஸ் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத் திற்கு முன்னாள் எம்எல்ஏ  ஆர்.சிங்காரம் தலைமை  வகித்தார். சிறுபான்மை  துறை மாவட்டச் செய லாளர் மல்லிப்பட்டினம் நாகூர் கனி முன்னிலை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். 

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி

அரியலூர், ஜன.23- நாட்டின் 75 ஆவது  குடியரசு தின விழா ஜன.26 அன்று நாடு முழு வதும் கொண்டாடப்பட உள்ளது.  இதை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களின் ஒத்திகை நிகழ்ச்சி செவ் வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட  முதன்மைக் கல்வி அலு வலர் விஜயலட்சுமி, கோட் டாட்சியர் ராமகிருஷ் ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பிப்.8 முதல் வெண்பன்றி வளர்ப்புப் பயிற்சி

புதுக்கோட்டை, ஜன.23 - புதுக்கோட்டை கால்நடை மருத்துவ பல் கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையம் மற்றும்  கல்வி மையத்தில் வெண்பன்றி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.  இதுகுறித்து மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் பூ.புவராஜன் விடுத் துள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை  கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மண்டல  ஆராய்ச்சி மையம் மற்றும் கல்வி மையத்தில்  தங்கும் விடுதி வசதியுடன் சுய வேலை வாய்ப்புக் கான வெண்பன்றி வளர்ப்புப் பயிற்சி பிப்.8 ஆம்  தேதி முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இருந்தும் இதில் பங்கு பெறலாம். வயது வரம்பு  கிடையாது. வணிக ரீதியாக வெண் பன்றி  வளர்ப்பு மற்றும் விற்பனை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். வங்கி அதிகாரியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், கடனுதவிக்கான  ஏற்பாடுகளும் செய்து தரப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.  30.1.2024-க்குள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். மேலும், விபரங்களுக்கு 9443619255, 81225 36826 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு  கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அளவில்  இளைஞர்களுக்கான  விளையாட்டுப் போட்டி

புதுக்கோட்டை, ஜன.23 - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாயன்று தொடங்கின. போட்டிகளை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடங்கி  வைத்தார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், கபாடி போட்டி களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக  ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். கால்பந்து போட்டிகளுக்கு ஆண்கள்  மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.25,000, இரண் டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப் படும். கையுந்துபந்து போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும்  பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக  ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும்” என்றார்.

அயோத்தி அரசியல் இந்தியாவில் ஒரு மாற்றத்தையும் தராது! கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி பேட்டி

கும்பகோணம், ஜன.23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளை அடுத்த தத்து வாஞ்சேரி முன்னாள் எம்எல்ஏ ராமாமிர்த தொண்டைமான் சிலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.  அப்போது அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த  ஒரு மாற்றத்தையும் தராது. அயோத்தி யில் 3201 ராமர் கோயில் உள்ளது. இந்தியா வில் எந்தப் பகுதியில் கும்பாபிஷேக விழா  நடைபெற்றாலும் அந்த பகுதி விசேஷ மாகத் தான் இருக்கும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டு வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ராமர் கோவில் வேண்டாம் என  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்கூட சொல்லவில்லை. பாஜகதான் பாபர் மசூதியை இடித்து விட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டு வதாக சொன்னது. அயோத்தியில் எங்கே வேண்டும் என்றாலும் ராமர் கோவில் கட்டலாம் என்று சொன்னோம். ஆனால் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவிலை கட்டவில்லை; மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால்தான் கட்டியுள்ளோம் எனக் கூறி இந்திய மக்களை சாதுர்யமாக நம்ப வைத் துள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்தை அரசியல்  ஆக்குகிறார்கள். இதனால் இந்து மதத் திற்கோ, ராமர்க்கோ எந்தப் பெருமையும்  இல்லை. ராமர் கோவிலில் அமைதியாக வும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டிய  விழாவை, பிரதமர் மோடி பதற்றத்துடன் நிகழ்த்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

முந்திரிப்பழ மதிப்புக்கூட்டல் பயிற்சி தேவை ஆட்சியரிடம் இளைஞர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜன.23 - முந்திரி பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியரிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு  அளித்தனர். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் ஐ.சி.மெர்சி ரம்யா தலை மையில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முந்திரிப் பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப் பதற்கான பயிற்சி அளிக்க வேண்டும் என குளத்தூர் வட்டம் சீமானூரைச் சேர்ந்த கோ. ராஜகோபால் மற்றும் இளைஞர்கள் மனு அளித்தனர்.  பின்னர், அவர்கள் கூறுகையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம்  ஏக்கரில் முந்திரி பரவலாக சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. குறிப்பாக, கந்தர்வ கோட்டை, குளத்தூர், ஆலங்குடி, புதுக் கோட்டை வட்டங்களில் அதிகமாக சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. தனியார் தவிர வனத்துறை மற்றும் வனத்தோட்டக் கழ கத்தின் மூலமும் முந்திரி பராமரிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மரத்தில் இருந்து முந்திரிக்  கொட்டைகள் அறுவடை செய்யப்படு கின்றன. பழங்களை சந்தைப்படுத்த முடி யாததால் காட்டிலேயே கொட்டப்படு கின்றன.  இதனால், முந்திரி பழம் வீணா கிறது. ஆனால், முந்திரிப் பழத்தை மதிப்புக் கூட்டி ஏராளமான பொருட்கள் வெளி நாடு கள் மற்றும் வெளி மாநிலங்களில் தயாரிக்கப் படுகின்றன. மேலும், முந்திரிக் கொட்டை யும் அப்படியே விற்பனை செய்யப்படுகிறது. கட்டுப்படியான விலையும் இல்லை.  எனவே, முந்திரி பழம் மற்றும் முந்திரிக் கொட்டையில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி  அளித்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்தனர்.

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம்

கரூர், ஜன.23 - பிறப்பு பதிவு என்பது குழந்தையின் முதல் உரிமை  பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக் கான அத்தாட்சி. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை  பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றி தழ் ஆகும். குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை  பெற, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட்-விசா உரிமம் பெற, அயல்நாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் இன்றிய மையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட் டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு, பதிவு செய்யப்பட்ட நாளி லிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரின் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப் பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டண முமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின், 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை  பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரின் அறிவுரைப் படி, 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக் கும், 1.1.2000 –க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு  பதிவுகளுக்கும், குழந்தைக்கு பெயர் வைத்து பிறப்புச் சான்று  பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப் பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களு டன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) பிறப்பு சான்று பெற  விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்க ளில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.