districts

img

சேதமடைந்த பாலத்தால் பொதுமக்கள் அவதி டெண்டர் விட்டும் பணிகள் தொடங்கவில்லை

தஞ்சாவூர், மே 6-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், மருங்கப்பள்ளம் சிவன் கோயில் சாலையில் வலுவிழந்து, சேதமடைந்த நிலையில் உள்ள பாலத் திற்கு, டெண்டர் விடப்பட் டும் பணிகள் தொடங்கப் படாமல் உள்ளதால் பொது மக்கள் அவதியடைந்து வரு கின்றனர்.  உடனடியாக பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி க்கை விடுத்துள்ளனர்.  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மருங்கப் பள்ளத்தில் புகழ்பெற்ற ஒளஷதபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. தஞ்சையை ஆண்ட இரண் டாம் சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிவன் ஆலயத்திற்கு, தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  பேராவூரணியிலிருந்து சேதுபாவா சத்திரம் செல்லும் கிழக்கு கடற்கரை இணைப்புச் சாலையில் மருங்கப்பள்ளம் சிவன்கோயில் செல்லும் சாலை உள்ளது.  இந்த சாலையில் கல்லணைக் கால்வாய், நாடியம், கோட்டக்குளம் செல்லும் நாடாகாடு  கிளை வாய்க்காலின் குறுக்கே சுமார் 50  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சேத மடைந்த, வலுவிழந்த பாலம் உள்ளது.  இந்தப் பாலத்தின் வழியாக தினசரி சிவன் கோயிலுக்கு கார், பைக்குகளில் செல்லும்  பக்தர்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். மேலும் குருவிக்கரம்பை பகுதியில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டால், இந்தப் பாலம்  மாற்றுப் பாதையாகவும் உள்ளது. இத்தனை முக்கிய போக்குவரத்து உள்ள  இந்தப் பாலம் சேதமடைந்தும், பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாமல், எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழுந்து விடும் நிலை யில் உள்ளது. இந்தப் பாலத்தை பொது மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பொது மக்களின் தொடர் கோரிக்கையினால் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடு கடந் தும் ஒப்பந்தக்காரர் பணியைத் தொடங்க வில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலத்தை வாகனங்கள் கடக்கும்போது அசம் பாவிதம் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படும் முன்பும், மேட்டூரில் தண்ணீர் திறந்து கல்ல ணைக் கால்வாயில் தண்ணீர் வருவதற்கு முன்பும் பாலத்தை இடித்து விட்டு புதிய  பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

;