districts

‘அரிசி மீதான ஜிஎஸ்டியை முழுமையாக விலக்க வேண்டும்’

திருச்சிராப்பள்ளி, ஏப். 29- அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்குவதற்கு ஒன்றிய - மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் திருச்சியில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சம்மேளனத் தலைவர் டி. துளசிங்கம் கூறியிருப்பதாவது:-

“25 கிலோ அரிசி மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி  விதிக்கிறது. இதனால் ஒரு கிலோ அரிசி கூடுதலாக சேர்த்து 26 கிலோ  அரிசிப் பையை வாங்க வேண்டி யுள்ளது. இவ்வாறு கூடுதல் ஒரு கிலோ வுக்கும் சேர்த்து பணம் வசூலிப்ப தால் அரிசி விலை அதிகரிக்கிறது. 

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் மட்டும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உள்ளது. அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 

முன்பு அரிசி ஆலைகள் ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கு ரூ. 35  எனக் கட்டணம் செலுத்தின. ஆனால் தற்போது ரூ. 150 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன் ‘பீக் ஹவர்’ மின்சாரக் கட்டணம் என்று கூடுதலாக 25 விழுக்காடு வசூ லிக்கப்படுகிறது. இதுவும் அரிசி விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது.

விவசாயிகளிடமிருந்து நேரடி யாக கொண்டு வந்தாலும், வெளி  மாநிலங்களில் இருந்து கொண்டு வந்தாலும் சந்தைக் கட்டணம் என  தனியாக ‘செஸ்’ வரி வசூலிக்கப் படுகிறது. அதை கைவிட வேண்டும்.  அரிசி ஆலைகளில் இருந்து எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப் படும் தவிட்டுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பதையும் கைவிட வேண்டும். இவ்வாறு துளசிங்கம் தெரிவித்தார்.