districts

img

போராட்ட அறிவிப்பால் நடவடிக்கை: கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திருப்பாம்புரம் கோவில் நிர்வாகம் ஒப்புதல்

திருவாரூர்,நவ.23- திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் திருப் பாம்புரம் கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் மேலாளர் அராஜகப் போக்கை கண்டித்து திருப்பாம் புரம் கோவில் நிர்வாக அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கோவில் அடி மனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கம்பூர் கிளை சார்பாக வெள்ளிக் கிழமையன்று  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டிருந்தது. போராட்டத்தை அறிந்து குடவாசல் வட்டாட்சியர்  பேச்சுவார்த்தைக்கு அழைத் தார். குடவாசல் வட்டாட்சியர்  அலுவலகத்தில்  வட்டாட்சி யர் தேவகி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் சங்கத்தின்  மாநில பொருளாளர் எஸ்.துரை ராஜ் மற்றும் கோயில் நிர் வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்ட னர். இதில் கோயில் இடத்தில் குடியிருப்பவர் களை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண் டும். அரசு வழிகாட்டுதலின்படி  வாடகை நிர்ணயம் செய்யும் பசலி தொகை மற்றும் பழைய பாக்கி பசலி தொகை யையும் பயனாளிகள் வரவு செய்வார்கள் உள்ளிட்ட  கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை யில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம்.சேகர்,தலைவர் எஸ்.தம்புசாமி, அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜி. துரைராஜ், மாவட்ட தலைவர் கே.தமிழ்செல்வி, விவ சாயிகள் சங்கத்தின் குட வாசல் வடக்கு பகுதி ஒன்றிய செயலாளர் வி.ராஜதுரை, தலைவர் எஸ். ராஜேந்தி ரன், கம்பூர் கிளை நிர்வாகி ஏ.அப்துல் முத்தலிப் மற்றும் பயனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.