districts

img

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது

திருப்புத்தூர், பிப்.19-  சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே வையி ரவன்பட்டியில் திமுக மூத்த முன்னோடிகளை பாராட்டி கவுரவிக்கும்விதமாக பெண்கள் உள்ளிட்ட 1,500 நிர்வாகிகளுக்கு மாவட்ட திமுக சார்பில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழ மையன்று நடைபெற்றது.  நிகழ்விற்கு, கூட்டுற வுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமை வகித்  தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர்  தென்னவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்  தலைவர் கணேசன் வர வேற்றார். எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  திமுக மாநில இளைஞ ரணி செயலாளரும், இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி  ஸ்டாலின் 1,500 மூத்த நிர்  வாகிகளுக்கு பொற்கிழி மற்றும் பரிசுத்தொகை பாரா ட்டு சான்றிதழை வழங்கி னார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலும், ஒற்றை கல் வைத்து திருப்புமுனை ஏற்படுத்தியதால் வெள்ளி செங்கல்லும் மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசு கையில், ‘‘கடந்த ஒரு வரு டத்தில் ரூ.42 கோடி திமுக வுக்காக உழைத்தவர் களுக்கு வழங்கப்பட்டுள் ளது. வருகின்ற நாடாளு மன்ற தேர்தல் நமக்கு மிக வும் முக்கியம். கடந்த தேர்தல்  களில் பெற்ற வாக்குகளை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற வேண்டும். பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது. தமிழ கத்தை மாற்றான் தாய் பிள்  ளையாக பாஜக கருதுகிறது.  மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் வழங்கா மல் தமிழகத்திற்கு வஞ்சிக்கி றது.  ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் வரி கட்டினால், 28 காசு மட்டுமே வழங்குகிறது. 2024-ல் வல்லரசாக ஆக்கு வோம் என்று சொல்லிவிட்டு,  இப்பவும் அதையே சொல்லி வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அர சாக பாஜக செயல்படுகிறது. எந்த வளர்ச்சியும் இல்லை. மோடி நெருக்கமான நண்ப ரான அதானி 6 வருடங்களில் உலக பணக்காரர்கள் ஆனது  மட்டுமே சாதனை. பொதுத் துறை சொத்துக்களை தாரை  வார்த்து அதானி வளர்ச்சிக்கு  மட்டுமே மோடி செயல்பட்டு வருகிறார்.  முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றது முதல்  மகளிர் இலவச பயண  திட்டம், மகளிர் மேம்பாட்டு  திட்டங்கள். மாணவர் களுக்கு காலை உணவுத் திட்டம், மகளிருக்கு மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம், மருத்துவத்துறை வருவாய்த்துறை என எண் ணற்ற திட்டங்களை செய்து வருவதால், பக்கத்து மாநி லங்களில் இருந்து நம் மாநில திட்டங்களை பார்த்துச்  செல்லும் அளவு சிறப்பாக முதல்வர் ஆட்சி செய்து வரு கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை  விட வெற்றி பெற வேண் டும்’’ என்று கூறினார்.