திருச்சிராப்பள்ளி, பிப்.3- மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் திருச்சி தேசியக் கல்லூரியை கண்டித்து மாணவர் சங்கம் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டது. அரசு உதவிபெறும் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்களிடம், திருச்சி தேசியக் கல்லூரி அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வரு கிறது. மாதத்திற்கு ஒரு கட்டணம், ஆறு மாதத்திற்கு ஒரு கட்டணம், ஆண்டுக்கு ஒரு கட்டணம் என கட்டணத்தை உயர்த்தி கொண்டே செல்கிறது. இதனை கண்டித்தும், கல்வி கட்ட ணத்தை குறைக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் தேசிய கல்லூரியில் இருந்து நூற்றுக் கணக்கான மாணவர்கள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தேசிய கல்லூரி நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்த்திய கல்வி கட்டணத்தை உட னடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தினை வசூ லிக்க வேண்டுமென முழக்கமிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப் போது உடனடியாக விசாரணை நடத்தி கட்டணத்தை குறைப்பதற்கு நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மாணவர் சங்க திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா, மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ஹரிபிரசாத் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.