கரூர், ஆக.19 - குளித்தலையின் அடையாளமாக உள்ள காந்தி சிலையை அகற்றும் நக ராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. முத்துச்செல்வன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாநில குழு முடிவுகள் குறித்து பேசினார். மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு எதிர்காலப் பணிகள் குறித்து பேசினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலா ளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கூறியதாவது: கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் குளித்தலை நகரம் உள்ளது. இந்த நகரம் வரலாற்று சிறப்புமிக்க நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த குளித் தலை சட்டமன்றத் தொகுதியில், முதன் முதலாக திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரு மான டாக்டர் கலைஞர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் காவிரி கரையின் ஓரத்தில் குளித்தலை நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயிகளே அதிக ளவில் வாழ்ந்து வருகின்றனர். குளித்தலை நகரத்தை சுற்றிலும் வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு விவ சாயப் பணிகள் நடைபெறுகின்றன. 1995 ஆம் ஆண்டு குளித்தலை, பஞ்சாயத்தாக இருந்தது. அப்போதைய குளித்தலை பஞ்சாயத்துத் தலைவர் வையாபுரி சோலையார் தலைமையில் 16.3.1995 ஆம் ஆண்டு குளித்தலை பேருந்து நிலையத் தில், அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், காந்தி சிலையை திறந்து வைத்தார். இந்த காந்திசிலை குளித்தலை நக ரத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது. இந்த காந்தி சிலை, பேருந்து நிலையத் தின் முகப்பை மறைப்பதாக ஒரு பொய் யான காரணத்தை கூறி, குளித்தலை நகராட்சி நிர்வாகம் காந்தி சிலையை அகற் றுவதற்கான பணிகளை தீவிரமாக செய்கிறது. இதற்காக நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி யுள்ளது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அனைத்து கட்சி ஆலோச னைக் கூட்டத்தில் காந்தி சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச் செல்வன் உள்ளிட்ட பலர் வெளிநடப்பு செய்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள் ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
குளித்தலை பேருந்து நிலையத்தின் மையத்தில் மூன்று கடைகள் செயல்பட்டு வருகின்றன. அக்கடைகளை முழுமை யாக அகற்ற வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக செயலிழந்து உள்ள சங்கு ஊதும் தூண் காந்தி சிலையின் கிழக்குப் பகுதியில் உள்ளது. அந்த சங்கு ஊதும் தூணை அகற்றினால், சுமார் 8 அடிக்கு மேல் பாதை கிடைக்கும். இதன் மூலம் குளித்தலை பேருந்து நிலையத்திற்கு அதிகப்படியான இடவசதி கிடைக்கும். எனவே உடனடியாக இந்த ஆக்கிர மிப்புகளையும், சங்கு ஊதும் தூண் கட்டி டத்தையும் அகற்ற வேண்டும். இங்கு காந்தி சிலை இருப்பதால்தான் அப்பகுதி யில் விபத்துகள் நடைபெறாமல் உள்ளது. பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு சாலைகள் பிரிந்து செல்லும் வகையில் பாதுகாப்பான ரவுண்டானாவாக உள்ளது. பேருந்து நிலைய ஆக்கிர மிப்புகளை குளித்தலை நகராட்சி நிர்வா கம் அகற்ற வேண்டும்.
புதிய பேருந்து நிலையம் வேண்டும்
குளித்தலை நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ஆனால் குளித்தலை நகராட்சி நிர்வாகம் புதிய பேருந்து நிலை யம் அமைப்பதற்காக எந்தவித நடவ டிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. தற்போதுள்ள பழைய பேருந்து நிலை யத்தை பராமரிக்கிறோம் என்ற பெயரில் தரமற்ற பணிகளை மேற்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலையை அகற்றும் பணியில் செயல்பட்டு வருகிறது. உடனடியாக குளித்தலை நக ராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்ப்பை மீறி காந்தி சிலையை அகற்ற முயன்றால், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள், பொதுமக்களை திரட்டி தொடர் போராட் டங்களை நடத்துவோம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.