தஞ்சாவூர், மார்ச் 13- குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தாமல் இருப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை யன்று நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட மாட்டாது என தமிழக முதல்வர் தனக் குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கூறி யிருக்கிறார். ஆனால், அமல்படுத்தப் படாமல் இருக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தான் இருக்கும் இடத்தின் தன்மையு டன் பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் அடிப்படை யில் ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிகாரங்கள் உள்ளன. பெரும்பாலானவற்றை நடைமுறைப் படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டாலும், அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற அதிகா ரம் மாநில அரசுகளுக்கு உண்டு. முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா இரு மொழித் திட்டத்தை சட்டப்பேரவையில் நடைமுறைப் படுத்திய போது, நாடாளுமன்றம் இயற்றிய மொழி தொடர்பான சட்டத் தையும், தீர்மானத்தையும் இப்பேரவை நிராகரிக்கிறது என கூறித்தான் நிறை வேற்றினார். எனவே ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், நடை முறைப்படுத்தப்படாமல் இருப்ப தற்கும் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெறும். வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல பாதகமான சட்டங்களை திருத்தி, இந்தியாவை ஜனநாயக பாதை யில் கொண்டு செல்ல முழு முயற்சி மேற் கொள்ளபபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, ஆண்டு விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் கொ. மருதுபாண்டியன், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், மருது பாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணை முதல்வர் ரா. தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.