districts

img

செப்.7 மறியல் போராட்டம்: சிபிஎம் பிரச்சாரம்

அரியலூர், செப்.3 - செப்.7 மறியல் போராட்டத்தை விளக்கி அரியலூர் மாவட்டம் செந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கிராமம் தோறும் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தருமையன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முருகன், வாலிபர் சங்க பொறுப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இன்று திருவாரூரில் வாகனப் பிரச்சாரம்

மோடியின் மக்கள் விரோத அரசை கண்டித்து செப்டம்பர் 7 அன்று மாபெரும் ரயில் மறி யல் போராட்டம் நடைபெறவுள்ளது. ஒன்றிய அரசை கண்டித்து திருவா ரூர் மாவட்ட ரயில் நிலையங்களில் மறியல் போராட்டமும், ஒன்றிய அரசின் தபால் நிலையங்களில் முற்றுகைப் போராட்டமும் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி திருவாரூரில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்திலும், மத்தியக் குழு  உறுப்பினர் பெ.சண்முகம் திருத்து றைப்பூண்டி ரயில் மறியல் போராட்டத்தி லும் பங்கேற்க உள்ளனர். மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் தலைமையில், தபால் நிலையங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் செப். 1 முதல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து போராட் டம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு  ஏற்படுத்தும் வகையில், பல்வேறு கட்ட  பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படு கின்றன. இதன் ஒரு பகுதியாக திங்கள் கிழமை (செப்.4) புதூர் பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மோட்டார் சைக்கிள் வாகன பிரச்சாரம் நடைபெற உள்ளது.