districts

img

பொறையாரில் மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் பூ விற்பனை அதிகம்

இயற்கை மனிதர்களுக்கு அளித்த பெரும் கொடை களில் தென்னை மரமும் ஒன்று. அளவில்லாத மருத்துவ பலன்களை சலிப்பின்றி வழங்கி வரும் தென்னை யிலிருந்து கிடைக்கும் தேங்காய் பூவை குழந்தைகள் முதல் வயதான வர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவை மிகுந்தது. இது தின்பண்டமாக மட்டுமின்றி,  பல்வேறு நோய்களை குணமாக்கும் அருமருந்தாகவும்  இருக்கிறது. குறிப்பாக தேங்காய் பூ சாப்பிடு வது, பருவகால தொற்று நோய்களிலி ருந்து முழுமையான பாதுகாப்பை கொடுக்கிறதாம். தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப் பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம் என் கின்றனர். மேலும் தேங்காய் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக் கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறையவும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்க வும் முடியும் என்று ஆய்வுகள் கூறு கின்றன. மேலும், புற்றுநோய் செல்  களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக் கல்ஸை நம்முடைய உடலிலிருந்து  வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது தேங்காய் பூ.  தேங்காய்ப்பூவில் தேங்காய் மற்றும்  இளநீரில் இருப்பதைவிட அதிக  சத்துகள் இருக்கின்றன. மிக அதிக மான ஊட்டச்சத்து இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இருமடங்கு அதிகரிக்குமாம். தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுவதால் ரத்தத்தில்  உள்ள அதிகப்படியான சர்க்கரை யை கட்டுப்படுத்த இயல்கிறது.

ஜீரண சக்தி குறைவுக்கு தேங்காய்ப்பூ சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு. மலச்சிக்கலையும் குணமாக்குகிறது. தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவைக்கும் நல்ல பலன் தருகிறது என்கின்றனர். சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய்ப் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம்.  இன்னும் ஏராளமான நன்மை களை கொண்ட தேங்காய் பூ  வினை தேடி பிடித்து பலரும் விரும்பி  சாப்பிட தொடங்கியுள்ள நிலை யில், மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடிக்கும் திருக்கடை யூருக்கும் இடையேயுள்ள அனந்த மங்கலம் கண்ணப்பமூலை சாலை யில் தனது இரு சக்கர வாகனத்தை கடையாக மாற்றி தேங்காய் பூ  விற்பனை செய்கிறார் மன்னம்பந் தல் பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்ற இளைஞர்.  இவரிடம், படித்த படிப்புக்கு எங்க  வேலை இருக்கு என்பதால் இந்த  வேலை செய்கிறீர்களா? என கேட்ட தற்கு அவர், “பழங்கள் தான் விற்  பனை செய்து வந்தோம். தற்போது சில மாதங்களாக தேங்காய் பூவை யும் விற்று வருகிறோம்.

பெரிய தேங்காய் பூ 100 ரூபாய்க்கும், சிறி யது என்றால் இரண்டு 150-க்கும் விற்று வருகிறோம். முத்தின தேங் காயை மண்ணில் புதைத்து 90 நாட்களில் முளைவிட்டு இலை வளர்ந்த பிறகு எடுத்து அதிலுள்ள தேங்காயை பக்குவமாக உடைத்தெ டுத்தால் சேதமில்லாமல் கொப்பரை போன்று தேங்காயை எடுத்து சாப்பிட லாம் என பேசிக் கொண்டே அவ்வாறு எடுத்து காண்பித்தார். விலை அதிகமாக இருக்கே என்ற  போது, நாங்க சொந்தமாக பயிரிட்டு எடுத்தால் கொஞ்சம் குறைத்து தர லாம். ஆனால் தருமபுரிக்கு ஆர்டர் போட் தான் வாங்கி விற்கிறோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் அனந்தமங்கலம் மற்றும் மன்னம் பந்தலிலும், காரைக்காலிலும் கடை  போட்டு விற்று வருகிறோம். தேங் காய் பூ விற்பனை பெருமளவில் மக்களிடம் பரவி இருப்பதாகவும், அதன் நன்மை குறித்து நன்றாக அறிந்து பேரம் பேசாமல் சாப்பிட்டு செல்கின்றனர்” என்றார் சிரிப்புடன். வேலையே இல்லை என்று வீட்டில் முடங்காமல் சுயமாக தொழில் செய்து வாழ்க்கைக்கான ஆதா ரத்தை உருவாக்கிய ஜோதிமணி போன்ற இளைஞர்கள் நிச்சயம் முன்மாதிரிதான்

. செ.ஜான்சன்