உயிர் தப்பிய மாணவர்கள் மயிலாடுதுறை, செப்.19 - சீர்காழி அருகேயுள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்றின் சத்து ணவு சமையற்கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர் காழி அருகேயுள்ள துறையூர் கிராமம் 21 வது வார்டில் நக ராட்சி தொடக்கப் பள்ளி செயல் பட்டு வருகிறது. சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்த 16 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில் கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ள நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, செவ்வாயன்று பள்ளி திறக்கப் பட்டது. வழக்கம்போல பள்ளி மாணவர் களுக்கு மதிய உணவு சமைப்ப தற்கான பணியில் சமையலர்கள் ஈடுபட்டிருந்த போது, சத்து ணவு கூடத்தின் சிமெண்ட் கான் கீரிட்டாலான மேற்கூரை திடீ ரென பெயர்ந்து விழுந்தது. கட்டிடத் திற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இக்கட்டிடம் கடந்த 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், கடந்த 47 ஆண்டுகளாக பழமை யான கட்டிடத்திலேயே சமையற் கூடம் செயல்பட்டு வருகிறது. சிதிலமடைந்த சத்துணவு கூடத் திற்கு பதிலாக, புது கட்டிடத்தை கட்டித் தர வேண்டுமென நக ராட்சிக் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. இத னால்தான் தற்போது கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ள தாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இடிந்து விழுந்த நேரத்தில் 16 மாணவர்களும் வகுப்பறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இப்பள் ளியில் கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியா மல் தவிக்கின்றனர். உடனடியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை யும், மாவட்ட நிர்வாகமும் மாவட் டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி களில் சமையற்கூடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.