புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கோவிலூர் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா.ரெத்தினவேல், வட்டாட்சியர் காமராஜ், ஊராட்சிமன்றத் தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 661 பயனாளிகளுக்கு ரூ.1,91,84,977 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.