districts

img

தஞ்சை, திருவாரூரில் சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்கு குழு ஆய்வு

திருவாரூர்/தஞ்சாவூர், செப்.27 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேர வையின் பொதுக் கணக்குக் குழு  2023-2024 ஆய்வுக் கூட்டம் நடைபெற் றது. இதற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை, சட்ட மன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு  உறுப்பினர்கள் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட  ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். முன்னதாக கொரடாச்சேரி ஒன்றி யம், அம்மையப்பன் கிராமத்தில் பிரத மர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் வீடுகளையும், குளிக்கரை  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும்  வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி யையும், திருவாரூர் வேளாண்மை விரி வாக்க மையத்தினையும், திருவாரூர் அரசினர் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத் தப்பட்டோர் மாணவியர் விடுதி களையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை யின் பொதுக் கணக்குக் குழு ஆய்வு மேற்கொண்டது.  தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு  சட்டமன்ற பேரவை, பொதுக்கணக்கு குழுவின் தலைவர், சட்டமன்ற உறுப்பி னர் கு.செல்வபெருந்தகை தலைமை யில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில், பொதுக்கணக்கு குழு வின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை தஞ்சா வூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.