districts

img

பாதியில் நிறுத்தப்பட்ட கருமாதி மண்டப கட்டுமானப் பணியை சிபிஎம் தலைமையில் துவக்கிய மக்கள்

மயிலாடுதுறை, டிச.29 - மயிலாடுதுறை மாவட்டம் மாப் படுகை, கிட்டப்பா பாலம் அருகில்  கட்டுமானப் பணிகள் துவங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள கருமாதி மண்டபத்தை மக்களே கட்டும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று துவங்கியது. கட்சியின் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் உரை யாற்றினார். மயிலாடுதுறை ஒன்றி யச் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்தி ரன், நகரச் செயலாளர் டி.துரைக் கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், மாதர், வாலிபர் சங்கத்தி னர், 1,11,28 வார்டுகளைச் சேர்ந்த  பொதுமக்கள் கண்டன முழக்க மிட்டவாறு, மாப்படுகை ரயில்வே கேட்டிலிருந்து கட்டுமானப் பணிக் கான பொருட்களை எடுத்து வந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நகராட்சித் தலை வர், ஆணையர் காவல்துறை யின் பாதுகாப்போடு பேச்சு வார்த்தை நடத்தி, 15 நாட்களுக் குள் கட்டுமானப் பணியை துவங்கு வதாக கூறினர். ஆனால், ‘தொ டர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தும் போதெல்லாம், கால அவகாசம் கேட்டுவிட்டு பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுப்ப தில்லை’ எனக் கூறி காவல் தடுப்பு களையும் மீறி சென்ற போராட்டக் காரர்கள், கருமாதி மண்டப கட்டு மானப் பணியை துவக்கினர். பணிகளை மக்களே தொ டர்ந்து செய்து கட்டிடத்தை கட்டி  முடிக்கவுள்ளதாக கட்சியின் மாவட் டச் செயலாளர் பி.சீனிவாசன் அறி வித்தார்.  மாப்படுகை, கிட்டப்பா பாலம்  அருகில் உள்ள மயானத்தை பயன் படுத்தி வரும் மயிலாடுதுறை நகர 1,11, 28 ஆகிய வார்டுகள் மற்றும் மாப்படுகை, திருவிழந்தூர் ஊராட்சிகளில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் கோரிக்கையான கரு மாதி மண்டபம் மற்றும் மயானத் திற்கு அடிப்படை வசதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த இரண்டாண்டிற்கு முன்பு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, நக ராட்சியால் இடம் தேர்வு செய்யப் பட்டு மாப்படுகை கிட்டப்பா பாலம்  அருகில் நகராட்சிக்கு சொந்த மான இடத்தில் கருமாதி மண்ட பம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது கடந்த ஒரு  வருடமாக அப்பணிகள் பாதியி லேயே நிறுத்தப்பட்டுள்ளன. நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல கட்ட  பேச்சுவார்த்தைகள் நடை பெற்று, பணிகள் உடனே துவங்கப் படும் என்று எழுத்துப் பூர்வ மாக வாக்குறுதிகளும் அளித்த னர்.  பொதுமக்களிடம் மாவட்ட  ஆட்சியரே நேரடியாக வந்து கரு மாதி மண்டபத்தை உடனே கட்டித்  தருகிறோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்றுவரை ஒரு எந்தப் பணியையும் துவங்க வில்லை.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்ச ரிடமும் மக்கள் நேரடியாக மனு  கொடுத்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. பொதுமக்கள் சார்பில், ஆயிரம் பேரிடம் கையெ ழுத்து பெற்ற மனுவை மாவட்ட ஆட்சியரிடம்  கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் என்பவர், நகராட் சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப் படுகிற கருமாதி மண்டபத்தை, அங்கு கட்டவிடாமல் தொடர்ந்து பல்வேறு வகையில் தடுத்து வரு கிறார். அவருடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நக ராட்சி மற்றும் மாவட்ட நிர்வா கத்தை கட்டவிடாமல் மறைமுக மாக தடுத்து இடையூறு செய்கிறார் என பொதுமக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.