நாகப்பட்டினம், டிச.7 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வராததால் மக்கள் குடிநீரின்றி அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் 2300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 8000 மக்களைக் கொண்ட அந்த கிராமத்திற்கு ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வராததால் மக்கள் சொல் லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை யின் காரணமாக திருப்பூண்டியை சுற்றியுள்ள கிராமங்களான கீழப்பிடாகை, கருங்கண்ணி, காரப்பிடாகை, காமேஸ்வரம் உள்ளிட்ட கிரா மங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் திருப்பூண்டி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலை யில், மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமேஸ்வரம் ஊராட்சியில் இருந்து குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் போதுமான அளவிற்கு எல்லா மக்க ளுக்கும் குடிநீர் விநியோகம் கிடைக்காமல் பற்றாக்குறையாகவே உள்ளது. தற்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் முற்றிலும் குறைந்து விட்டதால், குடிநீருக்காக அருகில் இருக்கிற கிராமத்தை நோக்கி மக்கள் செல்கின்றனர். திருப்பூண்டி ஊராட்சியில் அரசு பொது மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, உயர்நி லைப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகள், வங்கிகள், கூட்டுறவு சங்கம் என அரசு நிர்வாகம் அலுவலகங்களும் உள்ளன. இதுகுறித்து சிபிஎம் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்அஜிஸ் கூறு கையில், ஒரு வாரமாக திருப்பூண்டி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூல மாக வழங்கப்படும் குடிநீர் வராததால், காசு கொடுத்து குடிநீர் வாங்கிக் குடிக்கும் நிலை யில் மக்கள் உள்ளனர். இது தொடர்பாக அதி காரிகளை அணுகியபோதும், எவ்வித நடவ டிக்கையும் இல்லை. குடிநீருக்காக போடப் பட்ட பைப்லைன் ஆங்காங்கே உடைந்து விடு வதாலும் குடிநீர் வீணாகிறது. எனவே சரியாக பராமரித்து குடிநீர் விநியோகத்தை செய்து திருப்பூண்டி ஊராட்சி மக்களுக்கு தட்டுப்பா டின்றி வழங்க வேண்டும் என்றார்.