திருவாரூர், அக்.14 - சீனாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியா விற்கு பெருமை சேர்த்துள் ளார் திருவாரூர் மாவட்டம் பேரளத்தைச் சேர்ந்த வீரர் ஏ.ராஜேஷ். தமிழகம் திரும்பிய ராஜேஷை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் பூந்தோட்டம் லயன்ஸ் சங்கத் தினர் பாராட்டி, சான்றிதழ், கேடயம் வழங்கி வரவேற் றனர். இதில் தலைவர் லயன் ப்ரேம் நௌசாத், செயலா ளர் லயன் வேல்முருகன், லயன் பொருளாளர் லயன் பாரக், நிர்வாக அலுவலர் சங்கர் மற்றும் பேரளம் பொதுமக்கள் பங்கேற்றனர். தங்கம் மற்றும் வெண் கலப் பதக்கம் வென்று, ஊர் திரும்பிய விளையாட்டு வீரர் ராஜேஷை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.