மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் (பொ) எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.சி.ரெங்கசாமி, சிஐடியு பொறுப்பாளர் ஏ.தேவராஜன் ஆகியோர் பேசினர்.