புதுக்கோட்டை, ஜன.29 - புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு அதிகமான பறவைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மாநிலம் முழுவதும் ஈர நிலங்க ளில் பறவைகள் கணக்கெடுப்பு ஜன வரி 27, 28 தேதிகளில் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வனச்சரகங்களில் மொத்தம் 25 இடங்க ளில் (கண்மாய்கள், குளங் கள், கடற்பகுதிகளில்) இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது. மாவட்ட வன அலு வலர் சோ.கணேச லிங்கம், மன்னர் கல்லூரி விலங்கி யல் துறைத்தலைவர் சு.பழனி சாமி ஆகியோர் தலைமை யில் மாணவர்கள், தன்னார்வ லர்கள், வனத்துறையினர் உள்பட 120 பேர் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றனர். புதுக்கோட்டை வனச்சர கத்தில் கவிநாடு கண்மாய், ஆரியூர் கண்மாய், அன்ன வாசல் பெரியகுளம், சிறுங் காகுளம், அருவாக்குளம், கீர னூர் கண்மாய், வெள்ளனூர் ஏரி, முத்துக்குடா கடலோரப் பகுதி, அறந்தாங்கி வனச்சரகத்தில் கரகத்திக்கோட்டை ஏரி, கட்டு மாவடி கடலோரப் பகுதி, பொன்னமராவதி வனச்சர கத்தில் கொன்னையூர் கண்மாய், ஏனாதி கண்மாய், காரையூர் கண்மாய், ஒலிய மங்கலம் கண்மாய், கருக பிள்ளம்பட்டி கண்மாய், கீர னூர் வனச் சரகத்தில் நீர்ப்பழனி ஏரி, ஓவியர்பட்டி ஏரி, பெரம்பூர் ஏரி, குளத்தூர் ஏரி, கீரனூர் ஏரி, திருமயம் வனச்சரகத்தில் பெல் ஏரி, தாமரைகண்மாய், வேங்கை கண்மாய், வன்னிக்குளத் தான் கண்மாய், ஊனை யூர் கண்மாய் ஆகிய 25 இடங்களில் 82 வகையான பறவை இனங்கள் மொத்தம் 11,980 எண்ணிக்கை யில் காணப்பட்டன. இதில் அதிகபட்சமாக அறந் தாங்கி வனச்சரகப் பகுதியில் 6,527 பறவைகளும், புதுக்கோட்டை வனச் சரகப் பகுதியில் 3160 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டைவிடவும் நிகழாண்டில் 3196 பறவைகள் கூடுதலாக கணக் கெடுப்பில் கண்டறியப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.