நாகர்கோவில், செப்.17- மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புத்தமத அமைப்பான நிப்போன்சான் மயோகோஜி என்ற அமைப்பும் இணைந்து அமைதி மற்றும் அகிம்சைக்காக நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153- ஆவது பிறந்த நாள் விழா வருகிற அக்டோ பர் மாதம் 2-ஆம் தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை புத்த மத துறவிகள் காந்திய வழியில் அமைதி நடைபயணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த நடை பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது. இந்த நடை பயணத்துக்கு புத்த மத துறவி இஸ்தானி தலைமை தாங்கினார். புத்த மதப்பெண் துறவிகள் லீலாவதி, கிமுரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைதி நடை பயணத்தை மதுரை காந்தி நினைவு அருங் காட்சியக செயலாளர் நந்தாராவ் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த புத்தமத துறவிகளின் அமைதி நடைபய ணம் கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, நாங்கு நேரி, சங்கரன்கோவில் ராஜபாளையம், கல்லுப்பட்டி வழியாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ஆம்தேதி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சென்றடைகிறது. இந்த அமைதி நடைபய ணம் மொத்தம் உள்ள 700 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து செல்கிறது.