districts

img

சேறும் சகதியுமான சாலை: செருவாவிடுதி மக்கள் அவதி

தஞ்சாவூர், டிச.6 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், செருவா விடுதி தெற்கு ஊராட்சியில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி நெடுஞ்சாலை கடைத்தெரு அருகே வெள்ளையன் சேர்வை  குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த  மண்சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக, போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் இருப்பதால், பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அரசு அலுவ லர்கள் உடனடியாக ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.