பெரம்பலூர், செப்.3 - பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். பெரம்பலூர் மாவட்டம், வேப் பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட குன்னம், அந்தூர், அசூர், ஒதியம், சித்தளி, எழுமூர், வைத்தி யநாதபுரம், ஆண்டிகுரும்பலூர் ஆகிய கிராமங்களில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துதல், பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கான அரசு கட்ட டங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட ரூ.5.11 கோடி மதிப்பி லான பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமை வகித்தார். மேலும் நியாய விலை கடை, பள்ளிகளில் சமைய லறை கூடம், சுகாதார வளாகம் போன்ற முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார்.