புதுக்கோட்டை, மே 13-
கீரனூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கீரனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.38 லட்சம் மதிப்பிலான துணை வேளாண்மை விரி வாக்க மையம் அமைக்கப் பட்டது. இந்த விரிவாக்க மையத்தை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகு பதி, கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். மேலும், 13 பய னாளிகளுக்கு ரூ.3.22 மதிப்பி லான வேளாண் இடுபொருட் களையும் வழங்கினார்.
திமுக மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப் பாண்டியன், வேளாண் இணை இயக்குநர் பெரிய சாமி, குன்றாண்டார்கோ வில் ஒன்றியக் குழுத் தலை வர் கே.ஆர்.என்.போஸ், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) செல்வம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.