திருச்சிராப்பள்ளி, ஜன.6- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர் பகுதி மக்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் கலங்கலாக இருந்ததால், ரூ.5 கோடி மதிப்பீட்டில் கம்பரசம்பேட்டை அய்யா ளம்மன் படித்துறை அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநக ராட்சி மண்டலம் எண்.4ல் பொது நிதி யின் கீழ் (2021-22) ரூ.95 லட்சம் மதிப் பீட்டில், பெரியமிளகுபாறை அரசு இயன் முறை மருத்துவமனை வளாகத்தில் புதி தாக கட்டப்பட்டுள்ள 5 லட்சம் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநக ராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.