தஞ்சாவூர், ஜூலை 20 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் செல்லும் மக்கள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வா ளர் துரைராஜ் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரா வூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுக்கள் சார்பில், பேராவூரணி பெரியார் சிலை அருகில் வியாழக்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, பேராவூரணி ஒன்றி யச் செயலாளர் (பொ) வே.ரெங்கசாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் (பொ) ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மூத்த தோழர் வீ.கருப்பையா, மாவட் டக்குழு உறுப்பினர் எம்.இந்துமதி, முன் னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், எம்.செல்வம், மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.வாசு, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா உட்பட ஏராளமானோர் பங்கேறறனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தோடு, ஒலி பெருக்கி வைக்கவும், ஆர்ப் பாட்டம் நடத்தவும் காவல் துறையினர் தடை விதித்தனர். கடைசியில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தனர்.