districts

கோவிலில் திருடியவர் கைது

அரியலூர், ஜூன் 29-

     அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி உண்டியல்கள் உடைக்  கப்பட்டு அதிலிருந்த பணம் 50,000 மற்றும் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உள்ளிட்ட திருடு போனது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி பொன்பரப்பி கிராமம் அய்யனார் கோயில் தெரு வைச் சேர்ந்த தமிழ்பாரதி (21) என்பவரைக் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தி சிறையிலடைத்தனர்.