districts

img

பெருமகளூர் பேரூராட்சியில் 2018- ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெருமகளூர் பேரூராட்சியில் 2018- ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட சொத்து வரியை திரும்ப வழங்க வேண்டும். பேரூராட்சி மன்றக் கூட்டத்தை  அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு  வி.பி.ஜெயச்சந்திரன் (திமுக) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.