districts

குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பு கூடுதல் ஆட்சியரிடம் பாசனதாரர்கள் புகார்

தஞ்சாவூர், ஜூன் 8-

      பேராவூரணி அருகே நீர்நிலை குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைக் கும் பணி நடைபெறுவதை தடுத்து நிறுத்தி, நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மறவன்வயல் பாசன தாரர்கள் சார்பில் கூடுதல் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  

     பேராவூரணிக்கு ஆய்வு பணிக்காக வந்திருந்த கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மருத்துவர் என்.ஓ.சுகபுத்திராவிடம், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ராவுத்தன் வயல் ஊராட்சி, மற வன்வயல் பாசனதாரர்கள் சார்பில், முக மது அலி மரைக்காயர் மகன் மு.முகமது வகி மன்சூர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.  

   மனுவில், ‘‘நான் மேற்கண்ட முகவரி யில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். 65. மறவன்வயல், சர்வே எண்கள் 21/1,2, 3,4 இல் நீர்நிலை குளத்தை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.  

   இதன் காரணமாக இப்பகுதி விவசா யம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  சாலை அமைப்பதற்கு வேறு வழிகள் இருந்தபோதிலும், நீர் நிலை குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டு வரு கிறது.  

   இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலு வலர்கள், வருவாய்த்துறையினரிடம் புகார்  அளித்தும், ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிகிறது.  

   எனவே, இதனை ஆய்வு செய்து சட்  டத்திற்கு உட்பட்டு, ஆக்கிரமிப்பு செய் துள்ள குளத்தை மீட்டு, விவசாய பாச னத்திற்கு பயன்படும் வகையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்  பட்டுள்ளது.