districts

பெண்ணுரிமை இயக்கங்களுக்கு பேரிழப்பு

“கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  வர லாறும், தோழர் சங்கரய்யா வின் வாழ்வும், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. கோவில்பட்டியில் 1922-ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று நரசிம்மலு - ராமானுஜம் தம்பதியின் மகனாகப் பிறந்தார். கல்லூரிப் படிபின்போதே விடுதலைப் போரில் பங்கெடுத்தார். அதன் காரணமாக சிறைக்குச் சென்று திரும்பியவர், விடு தலைக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் இயக் கத்தில் இணைந்து சாதி ஒழிப்பு, விவசா யிகளுக்கான போராட்டம், பெண்ணு ரிமைக்கான போராட்டம் இவற்றில் இரண் டறக் கலந்தார். மூன்றுமுறை எம்.எல்.ஏ.வாக, சட்ட மன்றத்தில் குரலற்றவர்களின் குரலாக இருந்தது சங்கரய்யாவின் குரல். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற போது சுதந்திரப் போராட்டம் தீவிரம டைந்த நிலையில், மாணவர் சங்கத்தை தொடங்கினார். அதன் செய லாளர் பொறுப்பேற்று பல்வேறு போராட் டங்களை வழி நடத்தினார். 1941ல் அண்ணாமலை பல்கலைக்கழக மாண வர்கள் கைது செய்யப்பட்ட போதும், போ ராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடக்க 15 நாட்கள் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் படிப்பை தொடர முடியாமல் போனது. சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தோழர் சங்கரய்யாவின் கவனம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பக்கம் திரும்பியது. அப்போதைய சூழலில் பூரண சுதந்திரமே இலக்கு என்று கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே தீர்மானம் நிறை வேற்றி இருந்தது. இதனால் அப்போது தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட்  கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார். 1942-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை  செய்யப்பட்டிருந்த சூழலில் அக்கட்சியின் கொல்கத்தா மாநாட்டில் கலந்து கொண்ட தற்காக தேடப்படும் நபர் ஆனார்.  

இதனால் மூன்று ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்தார். தோழர் சங்கரய்யாவின்  திருமணம் மத மறுப்பு திருமணமாகும். அவரது பிள்ளைகளின் திருமணங்களும் சாதி மறுப்பு திருமணங் கள் ஆகும். 1946-இல் மதுரையில் சுமார் ஒரு  லட்சம் பேர் கலந்து கொண்ட பொதுக்  கூட்டத்தை நடத்திய பின்னணியில்  மதுரை சதி வழக்கில் பி.ராமமூர்த்தி, சங்க ரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  அப்போது ஏறக்குறைய ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த அவர், விடு தலைக்கு ஒரு நாள் முன்னர் அதாவது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவில் தான் விடுதலை செய்யப்பட்டார். அறம் சார்ந்த அரசியலின் அடையாள மான தோழர் என். சங்கரய்யாவின் மறைவு தமிழகத்தில் முற்போக்கு இயக் கங்களுக்கும், குறிப்பாக பெண்ணுரிமை இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும்.  தியாக நெருப்பில் சுட்ட  சங்கின் வெண்மை. மேடையிலே வீசுகிற புயல் காற்று. இளைஞர்களின் நம்பிக்கை ஊற்று. பெண் சமத்துவத்தை காலமெல் லாம் உரைத்த உரைகல். கனிந்த முதுமை, காலப் புதுமை; வானம் போல் உயர்ந்த வாழ்க்கை, ஒப்பில்லா தலை வன் அன்புத் தோழர் என்.சங்கரய்யா வின்  மறைவிற்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தனது ஆழ்ந்த இரங்கலை யும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது”

அனைத்திந்திய ஜனநாயக 
மாதர் சங்க மாநிலத் தலைவர் 
எஸ்.வாலண்டினா, 
மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா 
ஆகியோரின் 
இரங்கல் அறிக்கை