தஞ்சாவூர், ஜூலை 27-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவ ருக்குத் தஞ்சாவூர் நீதிமன்றம், புதன்கிழமை ஏழு ஆண்டு கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.முருகா னந்தம் (60). இவர் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி 12 வயது சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, முருகானந்தத்தைக் கைது செய்த னர். இது தொடர்பாகத் தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து முரு கானந்தத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்ப ளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார்.