districts

img

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது! இதுதான் நம்முடைய இலக்கு!

திருச்சி - சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற 
“வெல்லும் சனநாயகம்’’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் இருந்து...

இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப் பும் நமக்குத்தான் இருக்கிறது. ஒன்றி யத்தில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்க ளில் சுயாட்சி அரசையும் உருவாக்க வேண்டும். அதனால்தான், குடியரசு நாளான இன்றைக்கு இந்த மாநாட்டை திருமாவளவன் கூட்டியிருக்கிறார். 

அம்பேத்கர் சொன்னது என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மக்களாட்சி மாண்பு கள் காக்கப்பட வேண்டும் என்றால், ஜன நாயகம் வென்றாக வேண்டும்! அப்போது தான், கூட்டாட்சி மலரும்! கூட்டாட்சியை சுட்டிக்காட்ட நாம் பயன்படுத்தும் ‘ஒன்றிய அரசு‘ என்ற சொல்லை ‘Union of States’ என்று பயன்படுத்தியவரே புரட்சியாளர் அம்பேத்கர்தான்!

அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியி ருக்கிறார்... “யூனியன் அரசும், மாநில அரசும் தனித்தனி அதிகாரம் பெற்றவை! ஒன்று மற்றொன்றிடம் அடிபணியவில்லை; ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது” என்று சொன்னார். அதைத்தான் நாமும் சொல்கி றோம்! “மாகாணங்கள் தெள்ளத் தெளி வான சகலவித தேசிய இன அம்சங்களை யும் கொண்டிருக்கின்றன. எனவே, அவற்றின் தேசியப் பண்பு முழுநிறைவாய் வளர்ந்து மலர சுதந்திர வாய்ப்பு அளிக்கப்பட வேண் டும்” என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.

நாடு முழுவதும் வீழ்த்த வேண்டும்
இத்தகைய எண்ணம் கொண்ட ஓர் ஒன்றிய அரசை நாம் உருவாக்க வேண்டும்! அதற்கு தொடக்கமாக பாஜக ஆட்சி அகற் றப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்பது, பூஜ்யம்! அதனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை பற்றி கவலைப்பட வேண்டிய தில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.வை வீழ்த்தினால் போதாது! அகில இந்தியா முழு வதும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்! அதற்கான அடித்தளம்தான் இந்தியா கூட்டணி! ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதை இலக்காக கொண்ட எல்லா கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கின்றன.

பாஜக என்று சொல்வதால், இது தனிப் பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணி என்று  சுருக்கிவிட முடியாது! இந்தியாவின், ஜன நாயகத்தை - மக்களாட்சியை - மதச்சார் பின்மையை - பன்முகத்தன்மையை - ஒடுக்கப்பட்ட மக்களை - ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக் கூடாது! இதுதான் நம்முடைய இலக்கு!

கண் முன்பே சிதைந்த காஷ்மீர்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக் காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக் காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக் காது. ஏன்... மாநிலங்களே இருக்காது! இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்! மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆக்கி விடுவார்கள்! கண்ணுக்கு முன்பே ஜம்மு - காஷ்மீர் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். ஜம்மு - காஷ்மீரை இரண்டாக பிரித்து - யூனி யன் பிரதேசங்களாக ஆக்கினார்கள். தேர் தல் கிடையாது! அரசியல் கட்சித் தலை வர்களுக்கு வீட்டுச் சிறை! இதுதான் பா.ஜ.க. பாணி சர்வாதிகாரம்! அந்த நிலைமைதான் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும்.

கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம்! 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! இது நாடாளு மன்ற ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லையா? உலக நாடுகள் என்ன நினைக் கும்? சிரிக்க மாட்டார்களா? “உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள் கிறீர்களே, நான்கில் ஒரு பங்கு உறுப்பி னர்களை சஸ்பெண்ட் செய்வதுதான் உங்கள் ஜனநாயகமா என்று கேட்க மாட்டார் களா? உலக நாடுகள் மத்தியில் இந்தியா வுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற் படுத்திய ஆட்சியாக பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்!

நமக்கு முன்னால் இருக்கும் நெருக்கடி, நாம் உணர்ந்திருப்பதை விட மிக மோசமா னது! மிக மிக மோசமானது!

பகைவர்களும் துரோகிகளும்
மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைமை மாறுபடும்! ஆனால் நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல்! ஒன்றி யத்தில் யார் ஆட்சி நடக்க வேண்டும் என் பதை மட்டும் மனதில் வைத்து எல்லோரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும்! பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் எந்தக் காரணம் கொண்டும் சிதறக்கூடாது! பகைவர்களோடு சேர்த்து துரோகிகளையும் மக்களிடையே அடையா ளம் காட்ட வேண்டும்!

வரலாறு என்ன சொல்ல வேண்டும் தெரி யுமா? “இந்தியா கூட்டணி அமைத்தார்கள்! இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றி னார்கள்!” இதுதான் வரலாறாக இருக்க வேண்டும்! சண்டிகரில் நடந்தது என்ன? ஒரே ஒரு எடுத்துக்காட்டை சொல்ல விரும்புகிறேன். சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் நடக்க இருந்தது. பா.ஜ.க.வுக்கு 14 உறுப்பினர்கள்! ஆம் ஆத்மி கட்சிக்கு 13 உறுப்பினர்கள்! காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள்! ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி! மேயர் பதவியை இந்தியா கூட்டணி கைப்பற்றும் நிலைமை உருவானது! இந்தியா கூட்ட ணியின் முதல் வெற்றியாக இது அமையப் போகிறது என்று வடமாநில ஊடகங்களில் எழுதினார்கள். உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? தேர்தலையே ரத்து செய்து விட்டார்கள்!

இறுகப் பற்றிக் கொள்வோம்
ஒரு மேயர் தேர்தலையே கேன்சல் செய்கிறார்கள் என்றால், பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்! நாம் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும்! ஜனநாயகம் வெல்லும்! அதனைக் காலம் சொல்லும்!