திருவாரூர், ஆக.13 -
பள்ளத்தில் விழுந்து பலியான அரசு போக்குவரத்து துறை ஊழியர் குமார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (50). இவர் கடந்த வியாழனன்று இரவு தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கி ளில் திருவாரூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மயிலாடுதுறை-திருவா ரூர் சாலையில் விசலூர் என்ற இடத்தில் சாலை விரிவாக்கத்துடன் பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந் தது. இந்நிலையில், குமார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி தேன்மொழி, மகள் ஓவிய லட்சுமி ஆகியோர் படுகாயத்துடன் திரு வாரூர் மருத்துவக் கல்லூரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
உடனடியாக நன்னிலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கட்டு மான பணியின் நிறுவன மேலாளர் ரவிக் குமார், மேற்பார்வையாளர் ரவிச்சந்தி ரன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், விபத்து நடந்த மயிலாடு துறை-திருவாரூர் சாலையில் விசலூர் கிராமத்தில் உள்ள பாலம் கட்டும் இடத்தில் வாலிபர் சங்கத்தின் நன்னி லம் ஒன்றியச் செயலாளர் கே.எம். பாலா, மாநிலத் துணைத் தலைவர் சலாவுதீன் தலைமையில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், பாலம் கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த குமார் குடும்பத் திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை-திருவாரூர் வரையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு பலகை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு கள் எதுவும் இல்லை. இதனை கண்டித் தும், விபத்து நிகழாமல் இருக்கும் வகையில் உடனடியாக பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென வலியுறுத்தினர்.
போராட்டத்தை அறிந்து வந்த நன்னி லம் காவல் துணை கண்காணிப்பாளர் சரண்யா மற்றும் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோர், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறினர். இதன்படி வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் வட்டாட்சியர் அலுவல கத்தில், வட்டாட்சியர் ஜெகதீசன் தலை மையில் நடந்த பேச்சுவார்த்தையில், சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலா ளர் கே.எம்.லிங்கம், நகரச் செயலாளர் நடராஜன், அரசு போக்குவரத்துத் துறை ஊழியர் (சிஐடியு) சங்க நாகை மண்டல நிர்வாகிகள் பலர் பங்கேற்ற னர்.
இதில் பலியான குமார் குடும்பத் திற்கான நிவாரணத் தொகை காசோ லையாக வழங்கப்பட்டது. சாலை பணி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகையும், பாதுகாப்பான முறையில் பணி நடைபெறும் எனவும் அலுவ லர்கள் உறுதி அளித்தனர்.