districts

img

தூர்வாரும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் முடியும்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

தஞ்சாவூர், மே 13-

     தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில்  முடிவடையும் என மாவட்ட தூர்வாரும் பணி கள் கண்காணிப்பு அலுவலர் த.ஆனந்த் தெரி வித்தார்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடியில் நடைபெற்று வரும்  தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த த. ஆனந்த், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பணியின் தன்மை, தரம் குறித்து கேட்ட றிந்தார்.

   பின்னர் செய்தியாளர்களிடம் த.ஆனந்த் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.20  கோடி மதிப்பீட்டில், 1,068 கி.மீட்டர் நீளத்து க்கு, 189 பணிகள் தூர்வாரும் பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி களுக்காக 240 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும். தற்போது மாவட்டத்தில் சில இடங்க ளில் மழை பெய்ததால், தூர்வாரும் பணி களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஜூன்  முதல் வாரத்தில் அனைத்து பணிகளும் நிறை வடைந்துவிடும்.

  தூர்வாரும் பணியின் போது, விவசாய  சங்கங்களின் குழுக்களையும், கலந்து ஆலோ சனை செய்து பணிகள் மேற்கொள்ளப்படு கிறது. பணிகள் நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை வைக்கப்பட்டு பணிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. தூர்வாரும் பணிகள் அனைத் தும் சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப் படுகிறது. இதனை விவசாயிகள் வரவேற் கின்றனர்” என்றார்.

  ஆய்வின் போது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.