தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செந்தலை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட ஆட்சியர், மருத்துவமனை பதிவேடுகள், மருந்துகள் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.