திருநெல்வேலி, நவ .14- நெல்லை மாவட்ட ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களை ஊக்கு விக்கும் வகையில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பால்வளத்துறை மூலம் பயிற்சி வழங்கும் பயிற்சி மையத்தினை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலி காட்சி வாயி லாக பால்வளத் துறையின் மூலம் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணி களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருநெல் வேலி மாவட்ட ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களை ஊக்கு விக்கும் வகையில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூல கம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலைய கட்டிடத்தி னையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், ரெட்டி யார்பட்டி ஆவினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் பால் உற் பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம், ஆய்வகம், விடுதி வசதி யுடன் கூடிய பயிற்சி நிலைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித் தலை வர் மருத்துவர்.கா.ப.கார்த்தி கேயன் திருநெல்வேலி மாநக ராட்சி மேயர் பி.எம்.சரவணன்,
துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி, இனிப்புகளை வழங்கினார். நெல்லை மாவட்டம், ராஷ்டி ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.1.21 கோடி மதிப்பில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கள் ஒன்றியம் சார்பில் ஆவின் ஒன்றியத்தில் உருவாக்கப்பட் டுள்ள மகளிர் தங்கும் விடுதி, நூலகம், மாட்டு கொட்டகை, பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சி மையம் சுகாதார வசதியுடன் கட்டப் பட்டுள்ளது. சுமார் 50 நபர்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள். அவர்களுக்கு கால்நடை மருத்து வர்கள் மூலம் பயிற்சி வழங்கப் படவுள்ளது. மேலும், செயற்கை முறையில் கருவுற்றலுக்கான பயிற்சி, தூய பால் உற்பத்தி செய்தல், பால் உற்பத்தியை பெருக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் பால் உற்பத்தியாளர் கள் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், ஆவின் பொது மேளாளர் தியானேஷ்பாபு, உதவி பொது மேலாளர் மரு.சரவண முத்து, துணை பதிவாளர் பால்வளத்துறை சைமன் சார்லஸ் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.