districts

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: அரசு பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஏன்?

உயர் நீதிமன்றம் கேள்வி மதுரை, டிச.3-  விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய இவ்வளவு கால தாமதம் ஏற்படுவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில், ‘‘அம்பா சமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்த காவல்துறை தன்னை கடுமையாக தாக்கினர். அப்போது தன்னுடைய 4 நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில் தான் மட்டுமன்றி விசாரணை கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார்.  இதைத் தொடர்ந்து தன்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர்.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்.  அம்பாசமுத்திரம் காவல் நிலை யத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொ டர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திரு நெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில், அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க வேண்டும், அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மனுத்தாக் கல் செய்து 3 மாதங்களுக்கு மேலாகியும் அரசுத் தரப்பில் தற்போது வரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு பதில் மனு தாக்கல் செய்ய இவ்வளவு கால தாமதம் ஏற்படுவது ஏன்?. தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.