பொன்னமராவதி, மே 7-
பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணி மனையில் மேலாளராக பணிபுரிபவர் அருண்குமார். இவர் சனிக்கிழமை அன்று மதுரை செல்லும் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் நிஜார் பேருந்துக்கு டீசல் கூடுதலா கப் பிடித்தார் எனக் கூறித் தாக்கிதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த சிஐடியு கிளை நிர்வாகிகள் பாலமுரு கன், ரவிச்சந்திரன், உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்க ளும் சனிக்கிழமை இரவு ஒரு மணி அளவில் கிளை மேலாளரை பணியிடமாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொன்னமராவதி பணிமனையை முற்றுகை யிட்டு பேருந்துகளை இயக்க மறுத்தனர். தகவலறிந்து வந்த மண்டல மேலாளர் குணசேகரன், மண்டல மேலா ளர் (வணிகம்) சுப்பு ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கிளை மேலாளரை ஒரு வாரத்தில் பணி மாறுதல் செய்துவிடுவோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை;க கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.