districts

img

தமிழ்நாட்டில் கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைகிறது

தஞ்சாவூர், டிச.29-  தமிழ்நாடு முழுவதும் கரும்பு  சாகுபடிப் பரப்பளவு குறைந்து வரு கிறது என தமிழக அரசின் முதன் மைச் செயலரும், சர்க்கரைத் துறை  ஆணையருமான சா.விஜய ராஜ்குமார் தெரிவித்தார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர கத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற தமிழ்நாடு சர்க்கரைக் கழக பங்குதாரர்களின் 48 ஆவது ஆண்டு  பேரவைக் கூட்டத்தில் அவர் பேசிய தாவது: பல்வேறு நிதிச்சுமைகள், முக்கியமான செலவினங்கள் இருந் தாலும்கூட, ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசு ஆலை களில் 40 லட்சம் டன்களும், தனி யார் ஆலைகளில் ஒரு கோடி டன் களும் அரைவை செய்யப்பட்டது. அரசு ஆலைகளுக்கு மட்டுமல்லா மல், தனியார் ஆலைகளுக்கும் கரும்பு வழங்கும் விவசாயி களுக்கு ஊக்கத் தொகையாக டன் னுக்கு ரூ. 195 வழங்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு ரூ. 62  கோடி ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. சர்க்கரைக்கு கிலோ ரூ.42 உற்பத்தி செலவாகிறது. சந்தை யில் நமக்கு கிலோ ரூ.36 முதல் ரூ.  39 வரைதான் கிடைக்கிறது. சர்க்கரை கழிவுகளிலிருந்து கிடைக் கும் வருவாயைக் கணக்கில் சேர்த்தாலும், ஒவ்வொரு கிலோ உற்பத்திக்கும் குறைந்தது ரூ.2 முதல் 3 வரை நட்டத்தைத்தான் தரு கிறது. கடந்தாண்டு பல்வேறு முயற்சி களின் மூலம் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை கட்டுமான அளவு (பிழிதிறன்) 8.50  சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகளில் வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, அரூர் ஆகியவற்றில் 10.50 முதல் 11 சதவீதம் வரை சர்க்கரை கட்டு மானம் கிடைத்தது. இதன் மூலம்  இந்த ஆலைகளைச் சார்ந்த விவசா யிகள் டன்னுக்கு கூடுதலாக ரூ.200  - 250 பெற்றனர். குருங்குளம் அறிஞர் அண்ணா  சர்க்கரை ஆலையில் 6 லட்சம் டன்  அரைவை செய்யப்பட்ட நிலை யில், கடந்த ஆண்டு 2.50 லட்சம்  டன்தான் அரைவை செய்யப்பட் டது. இதில், 60 ஆயிரம் டன் பக்கத்து  ஆலையிலிருந்து வாங்கப்பட்டன. ஆனால், குருங்குளம் ஆலையில் 1.90 லட்சம் டன் கரும்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தொ டர்ந்து தமிழ்நாடு முழுவதும் கரும்பு  பரப்பளவு குறைந்து வருகிறது. இதில் விவசாயிகள், ஆலை அலுவலர்கள் கூட்டு முயற்சி மேற் கொண்டால் அதிகப்படுத்த முடி யும். கரும்பு இருந்தாலும், இல்லா விட்டாலும் ஊதியம் வருகிறது என  ஊழியர்கள் கருதினால், நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. விவ சாயிகள் கரும்பு பயிரிட்டால்தான் ஆலையும் நீடிக்கும். குருங்குளம் சர்க்கரை ஆலை யில் ஊழல் முறைகேடுகள் தொடர் பாக அலுவலர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள் மீதும் வழக்கு பதிவு  செய்யப்பட்டு, நீதிமன்ற விசார ணையில் உள்ளது. தவறு இழைத்த வர்கள் நிச்சயமாக தண்டனை பெறுவர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, விவசாய சங்க  பிரதிநிதிகள் தங்களது கருத்து களையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேசினர்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப், தமிழக ஆளுநரின் பிரதிநிதி கே.சித்ரா, தலைமை கரும்பு அபிவிருத்தி அலு வலர் வெற்றிவேலன், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஆ. ரவிச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.