சிவகாசி, ஜூன் 9-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கண்ணகி காலனியில் உள்ள குடியிருப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆண்டு கால தொடர் போராட் டத்தினால் மின்சாரம் கிடைத்தது.
சிவகாசி மாநகராட்சிக்குஉட் பட்டது கண்ணகி காலனி மற்றும் எம்.ஜி.ஆர்.காலனி. இங்கு 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாதாரண ஏழை எளிய மக்களே வசித்து வருகின்றனர். நீண்ட காலமாக அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் வீடுகள் அமைத்து குடி யிருந்து வருகின்றனர். இவர்கள் அனை வருக் கம் பட்டா வழங்கிடக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தும் இங்குள்ள குடி யிருப்புகளுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை. இந்நிலை யில், கண்ணகி காலனியைச்சேர்ந்த 15 பேர் தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
ஆனால், மின்வாரிய நிர்வா கமோ, மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில்உள்ள குடியிருப்புகளுக்கு தடையில்லா சான்று வழங்கினால் மட்டுமே மின் இணைப்புகள் வழங்க முடியும் என தெரிவித்தது.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சி யர் அலுவலகத்தில் பெரும் முயற்சி செய்து தடையில்லா சான்று பெறப் பட்டது. அதன் பிறகு, மீண்டும் 15 வீடு களுக்கு மின் இணைப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டது. இருந்த போதும், மின்வாரிய அதிகாரிகள் இணைப்பு வழங்க மறுத்து வந்தனர்.
எனவே, மின் இணைப்பு வழங் காத மின்சார வாரியத்தை கண் டித்தும், உடனடியாக கண்ணகி காலனி குடியி ருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு வெள்ளியன்று போராட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது.
இந்தநிலையில், விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், கண்ணகி காலனியில் உள்ள 11 வீடுகளுக்கு முதற் கட்டமாக மின் இணைப்பு களை வழங்கினர். இதனால், அப்பகுதி யினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வெகுவாக பாராட்டினர்.