மாநில உரிமை கள் மீது தாக் குதல் நடத்தி, உரிமை களை பறிக்கும் மோடி தலைமையிலான ஒன் றிய பாஜக அரசைக் கண் டித்து திமுக தலைமை யிலான தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்ரவரி 8 வியாழக் கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களு க்கு அளித்த பேட்டியில்,”ஒன்றிய இணை யமைச்சர் எல்.முருகன் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட ங்களுக்கு நிதி கூட பெற்றுத்தரவில்லை அதையெல்லாம் வைத்து அவரது செயல் பாட்டை விமர்சிக்கும் விதமாகத்தான் டி.ஆர்.பாலு அவ்வாறு பேசினார். ஆனால் அதனை சாதி ரீதியாக திரித்து பரப்புவது ஆர்எஸ்எஸ் எப்போதும் செய்யும் யுக்தி. திமுக கூட்டணி மக்கள் கூட்டணி. கொள்கை அடிப்படையிலான கூட்டணி. இந்தியா கூட்டணி வரும் மக்க ளவை தேர்தலில் இந்தியா முழுவதும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி யமைக்கும். கருத்துக் கணிப்பைத் தாண்டி மக்கள் கணிப்பு “இந்தியா” கூட்டணியை வெற்றிபெறச் செய்யும். பாமக, தேமுதிக கட்சிகள் ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும்” என அவர் கூறினார்.