கும்பகோணம், ஆக.16-
பள்ளி கல்லூரியில் பரவி வரக்கூடிய சாதி, மத பிரி வினையை கட்டுப்படுத்திட வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட் டம் பந்தநல்லூர் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் பேரணி நடை பெற்றது. பேரணியை மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கு.சந்துரு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் பந்தநல்லூர் அரசு பள்ளி மாணவ-மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.