புதுக்கோட்டை, மே 27-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை வழியாக தஞ்சாவூர், மானா மதுரை இடையேயான சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டா லினிடம் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், இளைஞர் நலன், விளையாட்டு மேம் பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், கே. ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மனு ஒன்றினை அளித்தார்.
அந்த மனுவில், ‘‘கந்தர்வக் கோட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய சீமாங் சென்டர் ஏற்படுத்த வேண்டும். கந்தர்வக் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட வேண்டும். கந்தர்வக் கோட்டை ஊராட்சியை பேரூராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும்.
கந்தர்வகோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் அமைக்க வேண்டும். பயணி யர் மாளிகை கட்ட வேண்டும். கந்தர்வக் கோட்டை மற்றும் கறம்பக்குடி வேளாண் விரிவாக்க மையத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்.
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்துக்கும், பத்திரப் பதிவு அலுவல கத்துக்கும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும். ஒடப்பவிடுதி அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக வும், உப்பிலியக்குடி, வேளாடிப்பட்டி ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். கந்தர்வக்கோட்டை வழி யாக தஞ்சாவூர்- மானாமதுரை இடை யேயான சாலையை 4 வழிச் சாலையாக வும், புதுக்கோட்டை, செங்கிப்பட்டி சாலையை 2 வழிச் சாதையாக மாற்ற வேண்டும். மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுத லாக இளநிலை மற்றும் முதுநிலை பாடப் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.
காவிரி, குண்டாறு திட்டத்தை கந்தர்வக்கோட்டை வட்டாரத்தையும் இணைத்து செயல்படுத்த வேண்டும். திருச்சியில் இருந்து கீரனூர், ஆதனக் கோட்டை வழியாக ஆலங்குடிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 35 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. கோரிக்கை மனுக் களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.