districts

விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூர், ஜன.14-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கவிருந்த ரயில் மறியல் போராட்டம் சமாதான பேச்சுவார்த்தையால் ஒத்தி வைக்கப்பட்டது.  காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள், பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்ட மைப்பும் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறி வித்திருந்தனர். இதையடுத்து பேராவூரணி வட்டாட் சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி  தலைமையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரிதிவிராஜ் செள கான், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட  உதவி இயக்கவியல் மேலாளர் ஆகி யோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில், நகர வர்த்தக கழகத் தலை வர் ராஜேந்திரன், செயலாளர் திருப்பதி,  பொருளாளர் சாதிக் அலி,  கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி யன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தரப்பில், “காரைக்குடி  -திருவாரூர் வரையிலான ரயில் வழித்தடம் சுதந்திரத்திற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் காலத்தில் கிழக்கு கடற்கரையைச் சேர்ந்த  டெல்டா பகுதி மக்களுக்காக போடப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதையாகும். இந்த  வழித்தடத்தில் சென்னைக்கும் ராமேஸ் வரத்திற்கும் ரயில் இயக்கப்பட்டு தினசரி ஏராளமான பொதுமக்கள் பயணித்தனர். பேராவூரணி ரயில் நிலையம் ரயில்கள் கிராஸிங் செய்யும் ரயில் நிலையமாகவும், ரயில் இன்ஜின்களுக்கு தண்ணீர் பிடித்து  செல்லும் நிலையமாகவும் இருந்து வந்தது. கடைவீதியின் மையப் பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால், ஒவ்வொரு ரயில் நின்று செல்லும்போதும் பயணிகளால் கடைவீதி வியாபாரம் நன்றாக நடந்து வந்தது.  காரைக்குடி - திருவாரூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக் காக 2006 ஆம் ஆண்டு இந்த வழித்தடத் தில் சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பி ரஸ் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. தொ டர்ந்து நடந்த அகல ரயில் பாதை பணிக்காக 2012 ஆம் ஆண்டு முதல் திரு வாரூர்- காரைக்குடி இடையே இயங்கி  வந்த பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டது.  ரயில் சேவை இல்லாததால் காரைக் குடி, அதிராம்பட்டினம் கல்லூரிகளுக்கு சென்று வந்த மாணவர்களும், சென்னை க்கு வியாபாரம் தொடர்பாக சென்று வந்து  கொண்டிருந்த வியாபாரிகளும் பல்வேறு  இன்னல்களை அனுபவித்து வந்தனர்.  பத்தாண்டுகள் ரயில் சேவையின்றி இருந்த நிலையில், கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதை அமைத்து, ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் பேரா வூரணி ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நிற்காமல் செல்வது வேதனை அளிப்பதாக உள்ளது.

பேராவூரணியிலிருந்து தினசரி நூற்றுக் கணக்கானோர் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தியும், மன்னார் குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ரயில்  நிலையங்களுக்குச் சென்று சென்னை செல்லும் நிலை உள்ளது. மற்ற ரயில் களைவிட, சென்னை செல்லும் பயணிகள்  வசதிக்காக தாம்பரம் -செங்கோட்டை விரைவு ரயில் பேராவூரணியில் நின்று  செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பய ணிகள் வசதிக்காக பயணச்சீட்டு முன்பதிவு  மையம் தொடங்க வேண்டும்” என்றனர்.  ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்திய வருவாய் கோட்டாட்சி யர் அக்பர் அலி பதிலளித்து பேசுகை யில், “விரைவு ரயில் ஒரு ரயில் நிலை யத்தில் நின்று செல்ல குறைந்தது 25 பயணிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலும், ரயில்வே துறை தொடர்பான கோரிக்கை மனுக்களுக்கு பதிலளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என  விதியும் உள்ளது. நிர்வாக ரீதியான  முடிவுகளை திருச்சி கோட்ட ரயில்வே  மேலாளர் எடுக்க முடியாது. சென்னை யில் உள்ள உயர் அதிகாரிகள்தான் எடுக்க  முடியும் என்ற நிலை உள்ளது.  ஏற்கனவே இது தொடர்பாக பல முறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப் பட்டுள்ளதால், முதற்கட்டமாக விரைவு ரயில்கள் பரிசோதனை முறையில், பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு  நிமிடம் நின்று செல்ல, ஒரு மாதத்திற் குள் ரயில்வே நிர்வாகத்தை முடிவெ டுக்க வலியுறுத்துவது” என தெரிவித் தார். இதையடுத்து மறியல் போராட்டம்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  பேச்சுவார்த்தையில் வர்த்தக சங்க கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ரயில் பயணிகள் சங்கத் தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.