தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறை மெயின் சாலையில், பெட்ரோல் பங்க் அருகில் சாலையோர கழிவுநீர் வடிகால் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. விபத்து நேரும் முன், இப்பள்ளத்தை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?